வாவியில் மிதந்து வந்த நினைவு தூபியால் பெரும் பரபரப்பு

Batticaloa Mullivaikal Remembrance Day Sri Lanka Black Day for Tamils of Sri Lanka
By Raghav May 18, 2025 06:14 AM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) - கல்லடி பாலத்து வாவியில் இன அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து அமைக்கப்பட்ட இரண்டு தூபிகள் மிதந்து வந்ததையடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

குறித்த சம்பவம் நேற்று (17.05.2025) இரவு இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு ,சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு மிதக்கும் தூபிகளே இவ்வாறு கல்லடி பாலத்து வாவியில் மிதந்து வந்துள்ளது.

பிரதான நிகழ்வு ஆரம்பம் : உறவுகளின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்

பிரதான நிகழ்வு ஆரம்பம் : உறவுகளின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்

இன அழிப்பின் நினைவுத் தூபி

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பாலத்தின் வாவி ஊடாக சம்பவதினமான இரவு 9.00 மணியளவில் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்ட நிலையில் இரு மிதக்கும் வகையிலான இன அழிப்பின் நினைவாக தயாரிக்கப்பட்ட தூபிகள் மிதந்து முகத்துவாரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. 

வாவியில் மிதந்து வந்த நினைவு தூபியால் பெரும் பரபரப்பு | Kallady Bridge Tamil Genocide Commemoration

இதனை கண்ட மக்கள் இரவில் மின்விளக்குகள் ஒளிர்ந்த வண்ணம் மனிதர்கள் இன்றி இரு சிறிய படகுகள் போல மர்மான பொருள் வாவியில் ஒரு மணித்தியாலம் மிதப்பதை கண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அதனை மீட்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்த நிலையில் அந்த மர்மான படகுகள் முகத்துவாரம் நோக்கி வாவியில் நகர்ந்து கொண்ட நிலையில், டச்பார் பகுதி வாவிக்கரையில் அமைந்துள்ள மீன்பிடி படகு தயாரிக்கும் கட்டிட பகுதியில் கரையடைந்ததையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் அதனை கரைக்கு இழுத்து கொண்டு வந்தனர். 

இரத்தம் தோய்ந்த புனித பூமியில் வாசிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பிரகடனம்

இரத்தம் தோய்ந்த புனித பூமியில் வாசிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பிரகடனம்

முள்ளிவாய்கால் 

சுமார் 4 அடி கொண்ட சதுரமான ரெஜிபோமில் நடுவில் முள்ளிவாய்கால் அமைந்துள்ள நினைவு தூபி போன்ற புகைப்படம் நிறுத்தப்பட்டு அதில் தலைமகனின் வீர வணக்க நாள், இன அழிப்பு வாரம் 12 வைகாசி முதல் 17 வைகாசி வரை, பொங்கு தமிழ் பேரவை என வாசகம் பொறிக்கப்பட்டு அதற்கு அருகில் கறுப்பு ,சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு அதனை சுற்றி மொழுகுதிரி போன்ற வடிவிலான மின்விளக்குகள் ஒளிரவிட்டு மிதக்கும் முறையில் தயாரிக்கப்பட்டு வாவியில் விடப்பட்டுள்ளது. 

வாவியில் மிதந்து வந்த நினைவு தூபியால் பெரும் பரபரப்பு | Kallady Bridge Tamil Genocide Commemoration

இன அழிப்பு நினைவு கூரும் முகமாக வாவியில் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நினைவு தூபியை யார் அமைத்தது, இது எங்கிருந்து வாவியில் விடப்பட்டது என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை. 

மீட்கப்பட்ட இன அழிப்பு தூபியை காவல்துறையினர், காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு நிருபர் : சரவணன்

சிவப்பு - மஞ்சள் வர்ணத்தில் நினைவேந்தலுக்கு தயாராகும் கிளிநொச்சி மண்

சிவப்பு - மஞ்சள் வர்ணத்தில் நினைவேந்தலுக்கு தயாராகும் கிளிநொச்சி மண்

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்

மே 18 தமிழின அழிப்பு...! உணர்வெழுச்சியுடன் தயாராகும் விசுவமடு

மே 18 தமிழின அழிப்பு...! உணர்வெழுச்சியுடன் தயாராகும் விசுவமடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
மரண அறிவித்தல்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, London, United Kingdom

10 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

16 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, சங்கரபுரம், பூந்தோட்டம்

17 May, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Lausanne, Switzerland

23 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019