களுத்துறை மாணவி பணத்திற்கு விற்கப்பட்டாரா ; காவல்துறை வெளியிட்ட சந்தேகம்!

Sri Lanka Police Sri Lanka Police Investigation Death Sonnalum Kuttram Kalutara Incident
By Pakirathan May 13, 2023 06:15 AM GMT
Pakirathan

Pakirathan

in சமூகம்
Report

களுத்துறையில் உள்ள ஹோட்டல் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து 16 வயதுடைய மாணவி உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மரணம் தொடர்பில் காவல்துறையினர் மேற்கொள்ளுகின்ற விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள பிரதான சந்தேகநபருக்கு பணத்திற்காக குறித்த மாணவி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

காவல்துறையின் சந்தேகம்

களுத்துறை மாணவி பணத்திற்கு விற்கப்பட்டாரா ; காவல்துறை வெளியிட்ட சந்தேகம்! | Kalutara School Girl Death Exciting Information

உயிரிழந்த மாணவியுடன் விடுதிக்கு ஒன்றாக சென்ற அவரது நண்பியின் காதலன் குறித்த மாணவியை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபருக்கு 20,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய ஆலோசனை வழங்கியுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதனடிப்படையில், பிரதான சந்தேக நபர் பணத்தின் ஒரு பகுதியை உயிரிழந்த மாணவியின் நண்பியினுடைய காதலனுக்கு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதேசமயம், தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் நேற்றைய தினம் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதேவேளை, மாணவியின் மரணம் தற்கொலையா? கொலையா? என இன்னும் உறுதியாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவிக்கு கடைசியாக தொலைபேசி அழைப்பு செய்தது யார் என்பதை இதுவரை காவல்துறையினர் கண்டுபிடிக்கவில்லை.

கைதான பிரதான சந்தேக நபர் இருதய நோயாளி எனவும், சிறைச்சாலையில் விசேட பாதுகாப்பை வழங்குமாறும் பிரதிவாதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, மாணவியின் கால் மற்றும் மார்பகத்தில் பற்களின் அடையாளங்கள் காணப்படுவதாகவும், இதனால் சந்தேக நபரை சட்ட வைத்தியர் ஒருவரை பார்வையிட அனுமதிக்குமாறும் காவல்துறையினர் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்படி, சந்தேக நபரை எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி சட்ட வைத்தியரிடம் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்பின்னர், சந்தேகநபர் மே 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தற்போது தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேசமயம், உயிரிழந்த மாணவியின் குடும்ப உறுப்பினர்களிடமும் அவருடன் சென்ற 19 வயதுடைய அவரது நண்பியிடமும் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

பிரதான சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் மேற்கொண்டுவரும் தீவிர விசாரணைகளில் இன்னும் பல உண்மைகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகின்றது.


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்