பதவி நீக்கப்படும் முக்கிய உறுப்பினர் - குற்றப்பத்திரிகையின் பின்னணி
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி நீக்கம் தொடர்பான குற்றப்பத்திரிகை தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இது தொடர்பான சட்டப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில், “பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவிற்கு எதிராகத் தேவையான சட்ட நடவடிக்கைகளும், அவரை நீக்குவதற்கான குற்றப்பத்திரிகையும் தற்போது தயாரிக்கப்பட்டுவிட்டன.
பிரதிநிதிகள் அனைவரும் இணக்கம்
இதற்கு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
ஜனக ரத்நாயக்க என்ற நபரே இந்த மின்சாரத் தடைக்குக் காரணமானவர்.வேறு யாரும் இல்லை. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏனைய அதிகாரிகளை தவறாக வழிநடத்தி அவர்களின் அனுமதியின்றி வேலைகளை செய்து இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளனர்.
எனவே, இதற்கு எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து நாடாளுமன்றத்தில் தேவையான ஏற்பாடுகள் உள்ளன.'' என தெரிவித்துள்ளார்.
ஜனக்க ரத்நாயக்க
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனக்க ரத்நாயக்க “மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றப்பத்திரிக்கையை எதிர்நோக்க எதிர்பார்த்துள்ளேன்.”என தெரிவித்துள்ளார்.

