யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தில் கைது செய்யப்பட்ட சென்னை இளைஞன்
யாழ். காங்கேசன்துறை (Kankesanturai) துறைமுகத்தில் குஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று மாலை (16.05.2025) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்தியாவில் இருந்து நாகபட்டினம் துறைமுகம் ஊடாக கப்பல் வழியாக இளைஞர் ஒருவர் போதைப்பொருளை எடுத்து வந்துள்ளார்.
காவல்துறை விசாரணை
இதன்போது குறித்த நபர் காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து இலங்கை சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் சென்னையை சேர்ந்த 32 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காவல்துறை தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது காங்கேசன்துறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் : பு.கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



