கரூர் துயரச் சம்பவம்: காவல்துறை மீது நேரடியாக குற்றம் சுமத்தும் த.வெ.க
கரூர் வேலாயுதம் பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் நேர்ந்த துயர சம்பவத்திற்கு காவல்துறையே காரணம் என த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் குண்டர்கள் இணைந்து செயல்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயோ, தாமோ செல்வதை தடுக்கக்கூடாது எனவும் ஆதவ் அர்ஜுனா கோரிக்கை விடுத்துள்ளார்.
மனுத்தாக்கல்
இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர், ஆதவ் அர்ஜுனா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் தமிழக வெற்றிக் கழக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துக் கொண்டிருந்தார்.
குறித்த பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
