படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை!

Sri Lanka Army Sri Lankan Tamils Mullaitivu Anura Kumara Dissanayaka
By Sathangani Apr 11, 2025 09:09 AM GMT
Report

முல்லைத்தீவு (Mullaitivu) - கேப்பாப்புலவில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தங்கள் காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று (11) காலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கோரிக்கையினை முன்வைத்தனர்.

இதன்போது “மேதகு ஐனாதிபதி கேப்பாப்புலவு மக்களின் காணிகளை உடன் விடுவியுங்கள்“ என்ற பதாகையினை தாங்கியவாறு கவனயீர்ப்பினை மேற்கொண்டனர்.

35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட யாழ்.பலாலி வீதி : அநுர அரசை சாடும் நாமல்

35 வருடங்களின் பின் திறக்கப்பட்ட யாழ்.பலாலி வீதி : அநுர அரசை சாடும் நாமல்

அரச அதிபரிடம் கோரிக்கை

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட செலயத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரனை சந்தித்து மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க அழுத்தம் கொடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை! | Keppapilavu People Lands Held By The Soldiers

அண்மையில் கேப்பாப்புலவு மக்கள் ஐனாதிபதி செயலகத்திற்கு சென்று அங்கு கலந்துரையாடிய போது காணி விடயம் தொடர்பாக கேட்டபோது அது தொடர்பில் அங்கு எந்த தகவலும் இல்லை என ஐனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளமையை மாவட்ட அரசாங்க அதிபரிடம் சுட்டிக்காட்டினர்.

தேசபந்துவின் பிணைக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் : வெளியான அறிவிப்பு

தேசபந்துவின் பிணைக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் : வெளியான அறிவிப்பு

காணி விடுவிப்பு

ஐனாதிபதி செயலகத்திடம் இருந்து கேப்பாபிலவு காணிகள் தொடர்பிலான விபரங்களை திரட்டுமாறு மாவட்ட செயலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கேப்பாப்புலவு மக்களிடம் அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு மக்கள் கோரிக்கை! | Keppapilavu People Lands Held By The Soldiers

அதற்கான செயற்பாடுகளை தாங்கள் முன்னெடுத்து வருவதாகவும் அத்தோடு தம்மால் அனுப்பப்பட்ட கடிதங்களையும் அரச அதிபர் மக்களுக்கு காண்பித்தார்.

இதேவேளை கேப்பாப்புலவு மக்களின் 55 குடும்பங்களின் 59.5 ஏக்கார் காணி இன்னும் படையினரின் கட்டுப்பாட்டில் விடுவிக்கப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் போதை விவகாரத்தால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி

மட்டக்களப்பில் போதை விவகாரத்தால் குடும்பஸ்தருக்கு நேர்ந்த கதி


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    



ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி