ஈஸ்டர் தாக்குதல் : தேவாலயத்தை காட்ட சுரேஷ் சலே உதவினாரா... மொட்டுக்கட்சி கேள்வி
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஷ் சலே மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி கேள்வியெழுப்பியுள்ளது.
அதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திய தாக்குதல்தாரிக்கு தேவாலயத்தை அடையாளம் காட்டுவதற்காக சுரேஷ் சலே தேவைப்பட்டாரா? என்ற கேள்வி எழுவதாக அந்தக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
கட்சித் தலைமையகத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு
அத்துடன், சஹ்ரான் ஈரான் மற்றும் சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர்களுடன் தொடர்பை பேணியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியுள்ளமை அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு முன்னெடுத்த விசாரணையில் உறுதியாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர்களுடன் தொடர்பு கொண்டு, தற்கொலை குண்டுகளைத் தயாரித்து தாக்குதலுக்குத் தயாரான இந்தக் குழுவிற்கு, தாக்குதல் நடத்த வேண்டிய தேவாலயத்தை சுரேஷ் சலே தான் காண்பித்தார் என்று, சிலர் கூறுவது ஒரு நகைச்சுவையான விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |