ஏமன் நாட்டில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து
ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாநிலமான கேரளாவைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் செவிலியர் வேலை படித்திருப்பதால் 2008-ம் ஆண்டில் ஏமன் நாட்டிற்கு சென்று பல மருத்துவமனைகளில் பணிபுரிந்துள்ளார்.
இந்தநிலையில் அங்கு தன்னை துன்புறுத்தி, தனது கடவுச்சீட்டை பிடுங்கி வைத்துக்கொண்ட ஏமன் நாட்டவரான மஹ்தி (Talal Abdo Madhi) என்பவரிடமிருந்து எப்படியாவது தனது கடவுச்சீட்டை மீட்டு, தப்பி வந்துவிட வேண்டும் என திட்டமிட்ட நிமிஷா அவருக்கு மயக்க ஊசி போட்டிருக்கிறார்.
மரண தண்டனை
இருப்பினும், மயக்க மருந்தின் அளவு அதிகமாக மஹ்தி உயிரிழந்துள்ள நிலையில் மஹ்தியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனையை எதிர்த்து இந்திய அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக ஏமன் நாட்டின் மதகுருவிடம் கேரள மாநில மதகுரு பேசியதால் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கிராண்ட் முஃப்தி அபுபக்கர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா
