கார்க் தீவு தாக்குதல் பதிலடி! அமெரிக்கா - இஸ்ரேலை அதிரவைத்த ஈரானின் புதிய ஏவுகணை அலை
ஈரானின் இஸ்லாமிக் ரெவல்யூஷனரி கார்ட் கார்ப்ஸ் (IRGC) அறிவிப்பின்படி, “Operation True Promise 4” எனப்படும் இராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக அலை 50 மற்றும் அலை 51 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
கார்க் தீவை இலக்குவைத்த அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல்கள் அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக IRGC கூறியுள்ளது.
IRGC வெளியிட்ட அறிக்கை
Wave 50 – நடவடிக்கை IRGC வெளியிட்ட தகவலின்படி,

“Ya Zahra” என்ற குறியீட்டுப் பெயரில் நடத்தப்பட்ட Wave 50 தாக்குதலில் வளைகுடா பிராந்தியத்தில் உள்ள பல அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் ரேடார் அமைப்புகள் இலக்காகக் கொள்ளப்பட்டன.
குறிப்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி அருகே அமைந்துள்ள அல் தஃப்ரா விமானப்படை தளம், ஃபுஜைரா கடற்கரை பகுதி, பஹ்ரைனில் உள்ள ஜுஃபைர்( ஐந்தாவது கடற்படை) தலைமையகம், குவைத்தில் உள்ளஅலி அல்-சேலம் விமானப்படை தளம், ஜோர்தானில் உள்ள அல் அஸ்ராக் விமானப்படை தளம் ஆகிய தளங்கள் தாக்கப்பட்டதாக IRGC தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையில் IRGC Aerospace Force-இன் precision-strike drones (துல்லிய தாக்குதல் ட்ரோன்கள் / கமிகேஸ் ட்ரோன்கள்) பயன்படுத்தப்பட்டதாகவும், இஸ்ரேலுக்கு பாதுகாப்பு ஆதரவு வழங்கிய முன் எச்சரிக்கை ரேடார் (early-warning radar) அமைப்புகளும் இலக்காகக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மிகத் துல்லிய தாக்குதல்
இந்த தாக்குதல் ஜெனரல் அலி ஷத்மானி(Brigadier General Ali Shadmani) மற்றும் மேஜர் ஜெனரல் ஹஜ் ஹொசைன் ஹமதானி (Major General Haj Hossein Hamedani) ஆகியோரின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டதாக IRGC தெரிவித்துள்ளது.

மேலும், Wave 51 – நடவடிக்கை “அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அலி இப்ன் மூசா ”(Ya Ali ibn Musa al-Rida)” என்ற குறியீட்டுப் பெயரில் நடத்தப்பட்டதாகவும், இது சவூதி அரேபியாவின் ரியாத் நகரத்தின் தெற்கே அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளத்தை இலக்காகக் கொண்டதாகவும் IRGC கூறியுள்ளது.
இந்த தளம் அமெரிக்காவின் F-35 மற்றும் F-16 போர் விமானங்களின் தயாரிப்பு மற்றும் இயக்க மையமாக இருப்பதாகவும், எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்கள் மற்றும் AWACS கண்காணிப்பு விமானங்களும் இங்கு செயல்படுகின்றன என்றும் IRGC தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் liquid-fuel மற்றும் solid-fuel ஏவுகணைகள் இணைந்த தாக்குதல் முறையில் (combined launch) பயன்படுத்தப்பட்டதாகவும், இது மிகத் துல்லியமான தாக்குதலாக இருந்ததாகவும் IRGC விவரித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை ஷஹீத் Abu al-Qasim Babaiean மற்றும் அவரது மனைவியின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |