தமிழரசுக்கட்சி இளைஞர் அணி உதவிச் செயலாளரை வெள்ளைவானில் கடத்த முயற்சி -சாணக்கியன் எம்.பி தகவல்
இலங்கை தமிழரசுக்கட்சி இளைஞர் அணியின் உதவிச் செயலாளர் நிதன்சன் என்பவரை கல்முனையில் வைத்து வெள்ளை வானில் வந்தவர்களால் கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அரச புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் இனந்தெரியாதவர்கள், புகைப்படத்தில் உள்ள வெள்ளை வானில் இலங்கை தமிழ் அரசு கட்சி இளைஞர் அணியின் உதவி செயலாளர் நிதன்ஷனை கடத்த முயன்றுள்ளனர்.
இது தொடர்பில் கல்முனை காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Unidentified men who claimed to be part of the state intelligence apparatus attempted to kidnap Illankai Tamil Arasu Kachchi youth wing assistant sect Nithanshan in the white van in the photo. A complaint has been lodged with the Kalmunai police re this. @ReAdSarath pic.twitter.com/TzuWjeJIZc
— Shanakiyan Rajaputhiran Rasamanickam (@ShanakiyanR) February 17, 2022
