புதிய சட்டம் கருத்து சுதந்திரத்தின் சாவு மணி - கிளிநொச்சியில் பாரிய போராட்டம்..!
கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
“தற்போது சிறிலங்கா அரசு முன்வைத்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறைக்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்படும்.
ஊடகவியலாளர்கள் தங்களது கடமைகளைச் சுதந்திரமாக மேற்கொள்வது என்பது கேள்விக்குள்ளாகும்."
போன்ற விடயங்களை வலியுறுத்தி, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் "புதிய சட்டம் கருத்து சுதந்திரத்தின் சாவு மணி, பொருளாதார நெருக்கடியில் சிக்குண்ட நாட்டை ஜனநாயக நெருக்கடிக்குள்ளும் தள்ளாதீர், நல்லாட்சிக்கே சட்டத்தை உருவாக்குங்கள் அடக்கி ஒடுக்க உருவாக்காதீர்கள்." போன்ற பதாதைகளை ஏந்தி இருந்தனர்.




