பிலிப்பைன்ஸில் தலை சுற்ற வைக்கும் வெங்காயத்தின் விலை
பொருளாதார நெருக்கடி இலங்கையை மட்டுமல்ல உலக நாடுகளையும் வெகுவாக பாதித்துள்ளது. உக்ரைன் -ரஷ்யா போர் இதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று.
அந்த வகையில் பிலிப்பைன்ஸிலும் பொருளாதார தாக்கம் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
இந்த நிலையில் அங்கு பெரிய வெங்காயம் மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதால் பிலிப்பைன்ஸ் மக்கள் பாரிய கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தொடர்ந்து உயரும் வெங்காயத்தின் விலை
பிலிப்பைன்ஸில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து உள்நாட்டு உற்பத்தி, விநியோகம் குறைந்து வருவதாலும், அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்தவும் மார்ச் மாதத்திலிருந்து சுமார் 22,000 தொன் காய்கறிகளை பிலிப்பைன்ஸில் இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்று விவசாய நல அமைப்புகள் கூட்டாக தெரிவித்துள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாட்டின் உள்ளூர் உணவுகளில் வெங்காயம் பிரதானமாக உள்ளது. பெரும்பாலான உணவுப் பொருட்களில் வெங்காயம், பூண்டு ஆகியவை பிரதானமாக சேர்க்கப்படுகிறது.
மாட்டிறைச்சி -பன்றி இறைச்சி விலையை விட மூன்று மடங்கு அதிகம்
பிலிப்பைன்ஸில் மட்டும் சராசரியாக மாதத்திற்கு சுமார் 17,000 மெட்ரிக் தொன் காய்கறிகள் தேவைப்படுகிறது. இந்த நிலையில்தான் மக்களின் முக்கிய காய்கறிகளில் ஒன்றான வெங்காயம் ஒரு கிலோ கிராமுக்கு 600 பிசோஸ் (இலங்கை மதிப்பு ரூ 11,395.09) என்ற விலையில் பிலிப்பைன்ஸில் விற்கப்படுகிறது.
இது அந்நாட்டில் விற்கப்படும் மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை விட மூன்று மடங்கு அதிகம்.
பதுக்கல் போன்ற நடவடிக்கைகளால் காய்கறிகளின் விலைவாசி உயர்வு அதிகரிக்க இதுவே பிரதானமான காரணமாக கருதப்படுகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
