டொல்பின் வானில் துப்பாக்கியுடன் பயணித்த 10 பேர் அதிரடி கைது!
திருகோணமலையில் துப்பாக்கியுடன் டொல்பின் வானில் பயணித்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோமரங்கடவல - மல்போறுவ பிரதான வீதியில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கோமரங்கடவல, பாணந்துறை மற்றும் அட்டுலுகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 28 முதல் 58 வயதுக்கு இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசேட சோதனை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கோமரங்கடவல காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த டொல்பின் வான் ஒன்று மறித்து சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது, வானுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் வேட்டைக்குத் தேவையான உபகரணங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் எனவும், இப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் இணைந்து காட்டு மிருகங்களை வேட்டையாடுவதற்காகவே துப்பாக்கியுடன் சென்றிருந்தனர் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வரும் கோமரங்கடவல காவல்துறையினர், கைது செய்யப்பட்ட பத்து சந்தேகநபர்களையும் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட வனப்பகுதிகளில் சட்டவிரோத வேட்டையாடுதல் மற்றும் அனுமதிப்பத்திரமின்றி துப்பாக்கி வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |