அமெரிக்காவுடன் மோதலுக்கு தயார் - வடகொரிய அதிபர் அறிவிப்பு!
america
army
North Korea
Kim Jong-un
By Thavathevan
அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ முயற்சிகளையும் கட்டுப்படுத்த தயாராக உள்ளதாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் (Kim Jong-un) தெரிவித்துள்ளார்.
வடகொரியா அண்மையில் மிகப்பெரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியது.
இது குறித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவிக்கையில்,
இந்த ஏவுகணைப் பரிசோதனை, வடகொரியாவின் அணுசக்தி வலிமையை நிரூபிக்கவும், அமெரிக்க இராணுவ நடவடிக்கையை தடுப்பதற்காகவும் நடத்தப்பட்டது.
மேலும், இந்த ஏவுகணை வடகொரியாவின் முந்தைய தயாரிப்புகளை விட அதிக உயரம் மற்றும் தொலைவுகள் சென்று தாக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.