15 ஆண்டுகளாக இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட கிவுல் ஓயா திட்டம்

Sri Lankan Tamils Vavuniya
By Independent Writer Feb 10, 2026 06:16 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report
Courtesy: Kabil

பதினைந்து ஆண்டுகளாக ஆண்டுகளாக இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட கிவுல் ஓயா திட்டம் குறித்து தற்போது தான் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை முதல் முறையாக பகிரங்க கலந்துரையாடலை நடத்துவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், கிவுல் ஓயா திட்டமானது 1983ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு : சிறுவன் பலி! களத்திற்கு விரைந்த நீதிவான்

யாழில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச்சூடு : சிறுவன் பலி! களத்திற்கு விரைந்த நீதிவான்

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்திலேயே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அது கைவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.

15 ஆண்டுகளாக இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட கிவுல் ஓயா திட்டம் | Kivu Oya Project Was Kept Secret For 15 Years

தற்போது ஒரு போகம் விவசாயம் செய்யும் விவசாயிகளை இரண்டு போகம் விவசாயம் செய்ய வைப்பதே திட்டத்தின் நோக்கமாக காணப்படுவதாகவும் கூறினார்.

திட்டத்தில் பயனடையும் தரப்பினர் தொடர்பான விபரங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கிம்பிலிவெவ பகுதியில் 37 வீடுகள் நீரில் மூழ்கும் நிலை போன்ற விடயங்கள் மட்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும், ஆனால் கிவுல் ஓயா நீர்தேக்கத்தின் நீரேந்து பகுதிக்குள் அகப்பட்டு பாதிக்கப்படும் வவுனியா வடக்கு தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான வெடிவைத்தகல் மற்றும் மருதோடை ஆகிய தமிழ் கிராம சேவையாளர் பிரிவுகள் தொடர்பில் எவ்வித குறிப்புகளும் திட்ட முன்மொழிவில் இடம்பெறவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக இரகசியமாக முன்னெடுக்கப்பட்ட இத்திட்டம் குறித்து தற்போது தான் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை முதல் முறையாக பகிரங்க கலந்துரையாடலை நடத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

திட்டத்தால் பயனடையும் மக்களை அழைத்துள்ள போதிலும், பாதிக்கப்படும் மக்களையும் தரப்பினரையும் அழைக்காதது பாரபட்சமான செயல் எனவும் கேள்வி எழுப்பினார்.

விமான நிலையத்தில் சிக்கிய யாழ். ஆவா குழு உறுப்பினர்கள்..! பறந்த உத்தரவு

விமான நிலையத்தில் சிக்கிய யாழ். ஆவா குழு உறுப்பினர்கள்..! பறந்த உத்தரவு

பூர்வீக குளங்கள்

நீரேந்து பகுதி வனவள திணைக்களத்திற்கு சொந்தமான காடாகும் என அதிகாரிகள் விளக்கமளித்தபோது, அதனை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர், குறித்த பகுதிகளில் தமிழ் மக்களின் பூர்வீக குளங்கள் மற்றும் வயல் நிலங்கள் உள்ளதாகவும், அவற்றை விடுவிக்க வனவள திணைக்களத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

2002ஆம் ஆண்டு பெரிய மருதோடைக்குளம், சிற்றாற்றுக்குளம், கல்லாற்றுக்குளம் ஆகிய மூன்று குளங்களை புனரமைத்து 2000 ஏக்கர் நிலத்தில் விவசாயம் மேற்கொள்ள NIAP மற்றும் பின்னர் SIHRAN நிறுவனங்களூடாக திட்ட முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் தலையீட்டினால் அவை கைகூடவில்லை எனவும், தற்போது அந்த நிலங்களும் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், திட்டத்தின் மூலம் 2330 ஹெக்டயர் நிலம் நீரில் மூழ்கும் என மகாவலி அதிகாரசபை தெரிவிப்பதைக் காட்டிலும், அதைவிட அதிகளவான நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

காடுகளை அழிப்பதால் யானை - மனித மோதல் அதிகரிக்கும் என திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பயனடையும் தரப்பினருக்கே மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்படும் தமிழ் மக்களே இதனால் அதிக ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்தார்.

வட்டிப் பண தகராறில் இளைஞர் கழுத்தறுத்துக் கொடூரக் கொலை

வட்டிப் பண தகராறில் இளைஞர் கழுத்தறுத்துக் கொடூரக் கொலை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025