இராமநாதன் கல்லூரி மாணவி மரணம் : ஆசிரியருக்கு அதிரடியாக கட்டாய விடுமுறை

Sri Lanka Police Sri Lanka Teachers
By Shalini Balachandran May 09, 2025 02:25 PM GMT
Report
புதிய இணைப்பு

கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழப்பு விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிரியரை கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் தொடர்பாக காவல்துறை பீ அறிக்கை கிடைத்துள்ள நிலையில் அதற்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைக்கமைய குறித்த ஆசிரியரை நிறுவன கோவைச் சட்டத்தின் பிரகாரம் கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராந்திய யுத்தமாக மாறும் போர்...! அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம்: மிரட்டல் விடுத்த பாகிஸ்தான்

பிராந்திய யுத்தமாக மாறும் போர்...! அணுகுண்டு தாக்குதல் நடத்துவோம்: மிரட்டல் விடுத்த பாகிஸ்தான்

ஆரம்பக்கட்ட விசாரணைகள் 

குறித்த விடயத்தை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இராமநாதன் கல்லூரி மாணவி மரணம் : ஆசிரியருக்கு அதிரடியாக கட்டாய விடுமுறை | Kottehana School Girl Death Abuse Case Teacher

இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் அந்த விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் முறையாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒட்டுமொத்த சம்பவத்திலும் ஏதாவதொரு தரப்பு அவர்களின் கடமைகளை நிறைவேற்ற தவறியுள்ளார்களா என்பது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு அமைச்சினால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவசரமாக ஒன்று கூடிய மொட்டுக் கட்சியின் பிரபலங்கள்

அவசரமாக ஒன்று கூடிய மொட்டுக் கட்சியின் பிரபலங்கள்

கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஜேர்மன் யுவதி

கொழும்பில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ஜேர்மன் யுவதி

முதலாம் இணைப்பு 

கொழும்பு இராமநாதன் கல்லூரி (Ramanathan Hindu Ladies College) மாணவியின் மரணத்திற்கு காரணமானவருக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த விடயத்தை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா கோரமாகக் கொலை செய்யப்பட்ட போது இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பல்லாயிரம் பேரை ஒன்று திரட்டி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க பேரணி நடாத்தியதை யாவரும் அறிவர்.

நீதி கேட்டு ஆதங்கத்தில் நாடாளுமன்றில் கத்திய அர்ச்சுனா எம்.பி

நீதி கேட்டு ஆதங்கத்தில் நாடாளுமன்றில் கத்திய அர்ச்சுனா எம்.பி

தலை நகர் பகுதி 

அதேபோன்று இலங்கையின் தலை நகர் பகுதி கொழும்பில் தமிழ் மாணவியொருவர் பரிதாபமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்.

இராமநாதன் கல்லூரி மாணவி மரணம் : ஆசிரியருக்கு அதிரடியாக கட்டாய விடுமுறை | Kottehana School Girl Death Abuse Case Teacher

இதனை பலரும் மூடி மறைத்து குறித்த குற்றவாளிக்கு வெறும் இடமாற்றம் மட்டும் வழங்கப்பட்டிருக்கின்றது.

இராமநாதன் மகளிர் கல்லூரியில் சில ஆசிரியர்கள் இடமாற்றம் வழங்கப்பட்டாலும் ஆசிரிய சங்கத்தின் அனுசரணையோடு பல ஆண்டுகள் அங்கேயே பணியாற்றுகின்றனர், இது உண்மை.

நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டை உலுக்கும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஆசிரிய சங்கம்

இந்த கொலைச் சம்பவத்தையும் அதே நபர்கள் மூடி மறைக்க முனைந்துள்ளனர், குற்றவாளியாகக் காணப்படுபவரும் ஆசிரிய சங்கம் ஒன்றில் மிகவும் செல்வாக்கு மிக்கவர்.

அதனாலேயே ஏற்கனவே இவர் இழைத்த குற்றத்திற்கு தண்டனை வழங்கப்படவில்லை இது போன்று சில மாவட்டங்களிலும் சிலர் பாதுகாக்கப்படுகின்றனர்.

இராமநாதன் கல்லூரி மாணவி மரணம் : ஆசிரியருக்கு அதிரடியாக கட்டாய விடுமுறை | Kottehana School Girl Death Abuse Case Teacher

எதுவாயினும் ஒரு பிள்ளையின் மரணத்திற்கு ஒரு ஆசிரியர் காரணமாக இருந்தால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ஆகையால் குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்படும் அதேவேளை உடந்தையானவர்களை வெளிப்படுத்தி அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும், என கேட்டுக்கொள்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுந்து நொருங்கிய உலங்கு வானூர்தி! விபத்து தொடர்பில் ஆராய விசேட குழு

விழுந்து நொருங்கிய உலங்கு வானூர்தி! விபத்து தொடர்பில் ஆராய விசேட குழு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026