செம்மணி மர்மத்தை உடைக்க தயாராகும் சோமரத்ன - அச்சத்தில் அலறும் சரத் வீரசேகர

Human Rights Council United Nations Anura Kumara Dissanayaka Sarath Weerasekara chemmani mass graves jaffna
By Thulsi Aug 04, 2025 07:06 AM GMT
Report

கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ விடயம் குறித்து ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கை என்னவென்பதை எதிர்பார்த்துள்ளோம் என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர (Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.

சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியான எஸ்.சி விஜேவிக்கிரம ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதம் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவியான எஸ்.சி விஜேவிக்கிரம ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

புதைகுழியிலிருந்து வரும் கைக்குழந்தைகள் - பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு

புதைகுழியிலிருந்து வரும் கைக்குழந்தைகள் - பார்வையிட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு

உயர்நீதிமன்றத்தால் குற்றவாளி

கிருஷாந்தி படுகொலை வழக்கில் சோமரத்ன ராஜபக்ஷ உயர்நீதிமன்றத்தால் குற்றவாளியாக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மர்மத்தை உடைக்க தயாராகும் சோமரத்ன - அச்சத்தில் அலறும் சரத் வீரசேகர | Krishanthi Murder And The Chemmani Mass Graves

இராணுவத்தினர் குற்றம் புரிந்திருப்பார்களாயின் அவர்களுக்கு உள்ளக நீதிகட்டமைப்பின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

முறையான விசாரணைகளின் பிரகாரமே இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இவ்விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்வது சிக்கல் நிலையை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தை சர்வதேச விசாரணைக்கு கொண்டு சென்று சாட்சியமளிக்க சோமரத்ன ராஜபக்ஷ தயாராகவுள்ளதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோமரத்ன ராஜபக்சவின் அறிவிப்பு சிங்கள தரப்பிலிருந்து கிடைத்த ஆதரவு : சிறீதரன் எம்.பி

சோமரத்ன ராஜபக்சவின் அறிவிப்பு சிங்கள தரப்பிலிருந்து கிடைத்த ஆதரவு : சிறீதரன் எம்.பி

சர்வதேச விசாரணை

சர்வதேச விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் உள்ளக நீதி கட்டமைப்பின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

செம்மணி மர்மத்தை உடைக்க தயாராகும் சோமரத்ன - அச்சத்தில் அலறும் சரத் வீரசேகர | Krishanthi Murder And The Chemmani Mass Graves

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது.

சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி அனுப்பி வைத்த கடிதம் தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகள் என்னவென்பதை எதிர்பார்த்துள்ளோம் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வெளிப்படுமா யாழில் நடந்த படுகொலைகள்..! சோமரத்னவின் கடிதம்: மறுக்கும் நீதியமைச்சர்

வெளிப்படுமா யாழில் நடந்த படுகொலைகள்..! சோமரத்னவின் கடிதம்: மறுக்கும் நீதியமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026