வளைகுடாவில் தொடரும் ஈரானின் ஆதிக்கம்: குவைத் எரிசக்தி நிலையங்கள் மீது தாக்குதல்
குவைத்தின் தேசிய பெட்ரோலிய நிறுவனத்திற்கு (KNPC) சொந்தமான எரிசக்தி நிலையங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் குறைந்த அளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் சவுத் அப்துல்அஜிஸ் அல்-ஒதைபி தெரிவித்துள்ளார்.
பகிரங்க எச்சரிக்கை
வளைகுடா பிராந்தியத்திலுள்ள எரிசக்தி நிலையங்களை அழிப்போம் என ஈரான் விடுத்திருந்த பகிரங்க எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை எனக் கர்னல் சவுத் அப்துல்அஜிஸ் அல்-ஒதைபி உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்பு அமைப்புகள்
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் குவைத்தின் வான்பரப்பிற்குள் நுழைந்த 18 ட்ரோன்களில் 13 ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாகச் சுட்டு வீழ்த்தியுள்ளன.

கத்தார் மற்றும் சவுதி அரேபியாவைத் தொடர்ந்து ஈரானின் நேரடி அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள குவைத், தனது எல்லைப் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போர்ச் சூழலில் வளைகுடா நாடுகளின் எண்ணெய் விநியோகத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் ஈரான் இத்தகைய தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |