அமெரிக்காவுக்கே தெரியாமல் இஸ்ரேலின் தாக்குதல்! ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு களஞ்சியமான South Pars பகுதியில் உள்ள ஈரானிய உற்பத்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு எந்தத் தகவலும் தெரியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த தாக்குதலை அறிந்திருந்த இஸ்ரேலிய வட்டார தகவலின்படி, இந்த தாக்குதல் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதல், நடந்து வரும் போரில் ஒரு பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகின்ற நிலையில், ட்ரம்பின் மேற்படி கருத்து சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரானின் பதிலடி
இதற்கு முன்பு, இஸ்ரேல் ஈரானின் எரிபொருள் களஞ்சியங்களை தாக்கியிருந்தாலும், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிலையங்களை நேரடியாக தாக்காமல் இருந்தது.

இந்நிலையில், அதற்கு பதிலடியாக, ஈரான் அருகிலுள்ள வளைகுடா நாடுகளின் முக்கிய எரிசக்தி நிலையங்களை தாக்கியது. குறிப்பாக, கத்தாரின் முக்கிய எரிசக்தி மையமான Ras Laffan பகுதியில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது.
இவ்வாறானதொருபின்னணியில், Ras Laffan பகுதியில் ஏற்பட்ட சேதம் நீண்டகால உலகளாவிய எரிவாயு பற்றாக்குறையை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |