திருப்பி கொடுக்கப்படவுள்ள வடக்கு-கிழக்கு மக்களின் காணிகள் : தமிழர்களுக்கான மகிழ்ச்சி தகவல்!

Sri Lankan Tamils Mrs Pavithradevi Wanniarachchi Eastern Province Northern Province of Sri Lanka Department Of Wildlife
By Eunice Ruth Nov 26, 2023 02:28 PM GMT
Report

வடக்கு மற்றும் கிழக்கில், சிறிலங்கா வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்ட மக்கள் காணிகள் மீண்டும் அவர்களிடமே கொடுக்கப்படுமென வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உறுதியளித்துள்ளார். 

இரத்தினபுரி மாவட்ட வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார். 

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின் போது, வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீள அவர்களுக்கு வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். 

இதன்படி, யுத்தத்தின் பின்னர் குறித்த இரு திணைக்களங்களினாலும் சுவீகரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களுக்கான காணிகளை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

திருப்பி கொடுக்கப்படவுள்ள வடக்கு-கிழக்கு மக்களின் காணிகள் : தமிழர்களுக்கான மகிழ்ச்சி தகவல்! | Lands North East People Will Be Returned Sri Lanka

இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் காவல்துறையினர் அடாவடி

இரட்டை வாய்க்கால் மாவீரர் துயிலுமில்லத்தில் காவல்துறையினர் அடாவடி

சுவீகரிக்கப்பட்ட காணிகள்

தற்போதைய நிலவரப்படி, 1985 அல்லது அதற்கு முன்னர் சுவீகரிக்கப்பட்ட காணிகள் வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் காடுகளாக அல்லது வனவிலங்கு திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் இந்த காணிகளை அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளூர் மக்களுக்கு மீள வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

பலாங்கொடை, ரஜவக, காப்புக்காடு போன்ற பிரதேசங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரதேசங்களிலும் குடியிருப்பாளர்களுக்குச் சொந்தமான காணிகள் வனவளத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பவித்ரா வன்னியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

திருப்பி கொடுக்கப்படவுள்ள வடக்கு-கிழக்கு மக்களின் காணிகள் : தமிழர்களுக்கான மகிழ்ச்சி தகவல்! | Lands North East People Will Be Returned Sri Lanka

தமிழீழத் தேசிய மாவீரர் தினம் நாளை: புதுக்குடியிருப்பில் கதவடைப்பு(படங்கள்)

தமிழீழத் தேசிய மாவீரர் தினம் நாளை: புதுக்குடியிருப்பில் கதவடைப்பு(படங்கள்)

உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள காணிகள்

எவ்வாறாயினும், மறு ஆய்வுக்குப் பிறகு, எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு குறித்த காணிகள் மீண்டும் உள்ளூர் மக்களுக்கே திருப்பிக் கொடுக்கப்படுமென அவர் உறுதியளித்துள்ளார். 

அத்துடன், அங்கீகரிக்கப்படாத கையகப்படுத்துதலைத் தடுக்கும் வகையில் எல்லைகள் அதிகாரப்பூர்வமாக வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த காணிகளை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இலங்கையின் வனப் பரப்பை 32 வீதமாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டு, சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மட்டக்களப்பில் மாவீரர் தின நிகழ்விற்கு தடை(படங்கள்)

மட்டக்களப்பில் மாவீரர் தின நிகழ்விற்கு தடை(படங்கள்)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026