லசந்தவின் படுகொலை விவகாரம் : சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickrematunge) படுகொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கோரி, சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரை கடிதத்தை சட்டமா அதிபர் மீள பெற்றுக்கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
லசந்த விக்ரமதுங்கவின் சாரதி கடத்தப்பட்டமை மற்றும் அவரது குறிப்பேடு காணாமல் போனமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிக்குமாறு சட்டமா அதிபர் கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி பரிந்துரை செய்திருந்தார்.
சட்டமா அதிபர் திணைக்களம்
இந்த நிலையில், சட்டமா அதிபர் தனது பரிந்துரைக் கடிதத்தை மீள பெற்றுக்கொண்டார் என ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் போலியானது என சட்டமா அதிபர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் போதுமான ஆதாரங்கள் இருந்தால் சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய முடியும் என சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)