எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கை இலக்கு வைத்து பாரிய மோசடி..! வெளியாகியுள்ள எச்சரிக்கை
மோசடிகள்
ராணியின் இறுதிச் சடங்கிற்கான நுழைவுசீட்டுகளை விற்பதாகக் கூறி நடக்கும் மோசடிகள் குறித்து நிபுணர்கள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.
நாணயங்கள் மற்றும் முத்திரைகள் போன்ற மோசடியான நினைவுச் சின்னங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர்கள் பொது மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், ராணியின் இறுதிச் சடங்கிற்கு நுழைவுசீட்டுகள் எதுவும் விற்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைய குற்றங்கள்
ஒரு சோகம் ஏற்படும் போதெல்லாம், இணைய குற்றங்கள் தவிர்க்க முடியாமல் அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, அவர்கள் நன்கு சம்பாதித்த பணத்தைப் பிரிப்பதற்காக மக்களை ஏமாற்றுவார்கள் என கெட் சேப் (Get Safe) ஆன்லைனின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி நீட் தெரிவித்தார்.
ஒரு தேசம் துக்க நிலையில் இருக்கும்போது இதைச் செய்வது புரிந்துகொள்ள முடியாதது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சமீபத்திய மோசடியைப் பற்றி இன்று பொதுமக்களை எச்சரிக்க விரும்புகிறோம்.
எனவே இது குறித்து பொது மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
குறிப்பாக அருவருப்பான இந்த மோசடிக்கு பலியாகாமல் இருக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மோசடிகளில் பின்வருவன அடங்குவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்
- இறுதிச் சடங்குகளை பார்க்க போலி நுழைவுசீட்டுகள்
- போலி நாணயங்கள் மற்றும் முத்திரைகள்
- மீம்' கிரிப்டோகரன்சிஸ் (Meme' cryptocurrencies)
