உக்ரைனிய ஆளில்லா விமானங்களால் பதவியை இழந்த வெளிநாடொன்றின் பிரதமர்
உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் லாட்விய எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, லாட்விய பிரதமர் எவிகா சிலினா பதவி விலகியுள்ளார்.
ரஷ்யாவை குறிவைத்த இரண்டு உக்ரைனிய ஆளில்லா விமானங்கள் மே 7 அன்று கிழக்கு லாட்வியாவில் விழுந்து நொருங்கின.
பிரதமரின் செயற்பாட்டை விமர்சித்த பாதுகாப்பு அமைச்சர்
இருப்பினும், இந்த விவகாரம் கையாளப்பட்ட இராஜதந்திர முறையில் திருப்தியடையாத நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரிஸ் ஸ்ப்ராட்ஸ், பிரதமரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதன் விளைவாக, பிரதமர் அவரைப் பதவி நீக்கம் செய்து, அவருக்குப் பதிலாக வேறொருவரை நியமிக்க நடவடிக்கை எடுத்தார்.
பசிலுக்கு சொந்தமான வீட்டிற்குள் நுழைந்து போராட்டம்! அநுர தரப்பின் வாக்குறுதியை நினைவு படுத்திய மாணவர்கள்
கூட்டணி விலகியதால் கவிழ்ந்தது அரசாங்கம்
இருப்பினும், பிரதமர் சிலினாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ப்ராட்ஸின் முற்போக்குக் கட்சி அவரது ஆளும் கூட்டணியிலிருந்து விலகியது.

இதன் விளைவாக, ஒக்டோபரில் நடைபெறவிருந்த நாட்டின் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆளும் கூட்டணி கவிழ்ந்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |