லாப்ஸ் எரிவாயு விநியோகம்: நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாட்டு மக்களுக்கு லாப்ஸ் எரிவாயு(Laugfs gas) நிறுவனம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன்படி, இலங்கை முழுவதும் லாப்ஸ் எரிவாயுவை எந்தவித தட்டுப்பாடும் இன்றி விநியோகிப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மையில், நுவரெலியா பகுதியில் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை நிலவுவதாக செய்திகள் வெளியாகின.
லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறை
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் பல மாதங்களாக நிலவும் லாப்ஸ் எரிவாயு பற்றாக்குறையால் லாப்ஸ் எரிவாயு நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்திய நிறுவனம், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு விற்பனை முகவர்களுக்கும் தேவையான அளவு எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், எந்தவொரு பகுதியிலும் எரிவாயு பற்றாக்குறை இருந்தால், 1345 என்ற விசேட எண்ணை தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறு நிறுவனம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
