சட்டத்தரணி மற்றும் மனைவி படுகொலை! துப்பாக்கிதாரி கைது
அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொலை செய்த துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு துப்பாக்கிதாரியை பன்னிப்பிட்டியவில் உள்ள தனது தங்குமிடத்திற்கு அழைத்து வந்த ஒருவர் தாய்லாந்திற்கு தப்பிச் சென்றுள்ளார்.
கைப்பற்றப்பட்ட வாகனங்கள்
கஹதுவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கரந்தெனியே சுத்தா என்ற குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளி என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, துப்பாக்கிச் சூடு நடத்தியவரை ஏற்றிச் சென்ற காரும், நாட்டை விட்டு தப்பிச் சென்ற நபர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்வதற்காக வாடகைக்கு எடுத்த காரும் இன்று (21) மதியம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |