சட்டத்தரணி மற்றும் மனைவி கொலை! துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அடையாளம்
தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவரும், அவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கியதாகக் கூறப்படும் நபரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய சந்தேகநபர்கள்
அதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், "குற்றத்தில் ஈடுபட்ட வாகனம் பத்தேகம பகுதியில் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. குற்றத்திற்கு துப்பாக்கிகளை வழங்க வந்த வாகனம் கொட்டாவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளது.

குற்றம் செய்வதற்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தங்குமிடத்திற்கு கொண்டு வந்த வாகனத்தைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன, அதன் உரிமையாளர் இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்தக் குற்றத்தைச் செய்ய ரிவால்வரை பயன்படுத்திய சந்தேக நபர் தற்போது ருக்கஹவெல, மீவல, டெம்பிள் வீதி, 102/9 என்ற இலக்கத்தில் வசிக்கும் ராபர்ட் சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார், மேலும் அவரைக் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
குற்றம் செய்வதற்கு முன்பு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தங்குமிடத்திற்கு கொண்டு வந்த வாகனத்தின் உரிமையாளர் காலி, எத்கந்துர, பழைய கொலனி, ரசிக நிவாசவைச் சேர்ந்த வன்னியாராச்சிகே சிஹினயா தில்சர எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த சந்தேக நபரையும், சம்பந்தப்பட்ட வாகனத்தையும் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன." என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |