வாக்களிப்பு நிலையங்கள் முன் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் - பொதுமக்கள் விசனம்
வவுனியாவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு முன்பாக சில வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்வதால் பொதுமக்கள் அசௌகரியங்களை சந்தித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை முதல் இடம்பெற்று வருகின்றது.
வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதேச சபை ஆகிய 5 சபைகளுக்கும் 103 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1731 பேர் போட்டியிடுகின்றனர்.
பொதுமக்கள் விசனம்
ஒரு இலட்சத்து 79 ஆயிரத்து 293 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 154 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
காவல்துறையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், சில வாக்களிப்பு நிலையங்களின் முன்பாக பல்வேறு கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் ஒன்று கூடியுள்ளதுடன் தங்களுக்கு வாக்களிக்குமாறு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட பல வட்டாரங்களில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதுடன் ஏனைய சபைகளுக்கு முன்பாகவும் இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளமை தொடர்பாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
