பேருந்து நடத்துநரிடமிருந்து ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்...!

Batticaloa Sri Lanka
By Harrish Jan 28, 2025 05:15 PM GMT
Report

இலங்கைப் போக்குவரத்துச் சபை நடத்துநர் ஒருவர் தனக்கு நீதி கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதமானது நேற்று (27) ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைப் போக்குவரத்துச் சபையின் வாழைச்சேனை சாலையில் பேருந்து நடத்துநராகக் கடமையாற்றும் அபூதாலிப் முஹம்மது ஹிஸாம் என்பவரே ஜனாதிபதியின் கவனத்திற்கு தனது முறைப்பாட்டைக் கொண்டு சென்றுள்ளார்.

பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

தனக்கான நீதி

ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "கடந்த 22ஆம் திகதி எங்களது பேருந்து வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பிற்கு சேவையில் ஈடுபட்டிக்கொண்டிருந்து.

அன்றைய தினம் பி.ப. 4.30 மணிக்கு எமக்கு வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பிற்கான நேரமாகும். 

இந்நிலையில் எமக்குரிய நேரத்தில் எமது பேருந்துக்கு முன்னால் EP NB 7021 இலக்க தனியார் பேருந்து, அவ்விடத்தில் நிறுத்தி வைத்து பயணிகளை ஏற்றிக்கொண்டிந்தார்கள். அந்நேரம் நான் பேருந்திற்குள் இருந்த பயணிகளுக்கு டிக்கற் வழங்கிக்கொண்டிருந்தேன். 

பேருந்து நடத்துநரிடமிருந்து ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்...! | Letter From Bus Conductor To President Anura

அப்போது தனியார் பேருந்தின் சாரதி, நடத்துநர் மற்றும் இன்னும் ஒருவருமாக மூன்று பேர் எமது பேருந்துக்குள் நுழைந்து எனக்கு தலையில் அடிக்க முற்பட்ட போது நான் தடுத்தேன். 

அடி எனது கையில் பட்டதோடு, இன்னுமொருவர் பொல்லால் எனது தலையில் அடித்து, பின்பு என்னை பேருந்திலிருந்து வெளியில் இழுத்தெடுத்து என்னைத் தாக்கினார்.

தாக்கியவர்கள் என் கையிலிருந்த டிக்கற் இயந்திரத்தையும் பறித்தெடுத்து என் கையிலிருந்த 2200.00 ரூபாய் பணத்தையும் அபகரித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர். 

அதன் பின்னர் என்னை வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பிற்கு மாற்றி கடந்த 24ஆம் திகதி மாலை வீட்டிற்கு வந்தேன். 

அவர்கள் என்னைத் தாக்கியதில் எனது இடது தோள் பட்டையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் கூறினார்கள்.

அவசர சிகிச்சை பிரிவில் மாவை சேனாதிராஜா : பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகவல்

அவசர சிகிச்சை பிரிவில் மாவை சேனாதிராஜா : பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தகவல்

சம்பவம் குறித்து விசாரணை

தற்போது இது தொடர்பாக காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கிணங்க தனியார் பேருந்தின் சாரதியை கைது செய்துள்ளனர். மற்றை இருவரையும் கைது செய்யவில்லை.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஏற்கெனவே எமது சாலை பேருந்து சாரதி, நடத்துநர்களோடு பிரச்சினைப்பட்டுள்ளனர். அதற்கான முறைப்பாடும் உள்ளது. 

இவர்கள் அடிக்கடி இந்த வழிப்பாதையில் பிரச்சினையை ஏற்படுத்துகின்றவர்கள்.

பேருந்து நடத்துநரிடமிருந்து ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்...! | Letter From Bus Conductor To President Anura

இது இவ்வாறிருக்க, இதுவரையில் இது தொடர்பாக இலங்கை போக்குவரத்து வாழைச்சேனை சாலையால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. 

அத்தோடு சாலை முகாமையாளர் தனியார் பேருந்து நபர்களோடு சமாதானமாகுமாறு என்னிடம் கூறுகின்றார்.

எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்தி எனக்கு நீதி பெற்றுத்தருமாறு தங்களை மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ”என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளில் தேடவே கூடாத நான்கு விடயம் : மீறினால் என்ன நடக்கும் தெரியுமா !

கூகுளில் தேடவே கூடாத நான்கு விடயம் : மீறினால் என்ன நடக்கும் தெரியுமா !

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
Gallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026