பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அதிரடி முடிவு!
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தங்களது எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த தீர்மானம் எடுத்துள்ளது.
இதன்படி, உந்துருளிகளுக்கு 1000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1,500 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அத்துடன், மகிழுந்துகள், சிற்றூர்திகள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு, 5,000 ரூபாவுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இருப்பினும் பேருந்துகள், பாரவூர்திகள் உட்பட வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் உழவு வண்டிகள் உள்ளிட்ட வாகனங்ளுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த கட்டுப்பாடுகள் இன்று மதியம் ஒரு மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.