முல்லைத்தீவு மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது இலங்கை தமிழ் அரசுக் கட்சி
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணம் இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்துக்குள் அமைந்துள்ள தேர்தல் அலுவலகத்தில் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வைத்திய கலாநிதி சி சிவமோகன் மற்றும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினருமான திரு து. ரவிகரன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் துணுக்காய் பிரதேசக் கிளையின் தலைவரும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் திரு வ.கமலேஷ்வரன் ஆகியோர் இணைந்து குறித்த கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளனர்.
கட்டுப்பணம்
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பங்கு கொள்வதற்கான கட்டுப்பணமாக நான்கு பிரதேச சபைகளுக்குமாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் மொத்தமாக ரூபா 118500 செலுத்தப்பட்டுள்ளது.




