தேர்தலில் திசைக்காட்டியின் நிலை இதுதான்.! ரணில் பகிரங்கம்
இந்த ஆண்டு நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், திசைகாட்டி கட்சிக்கு பல இடங்களில் பெரும்பான்மை கிடைக்காது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
திசைக்காட்டி வெற்றி பெறும் என நினைக்குமாக இருந்ததால் அது நடக்காது என்று ரணில் கூறியுள்ளார்.
தவிசாளர்களின் நியமனம்
அதன்போது மேலும் கருத்து தெரிவித்த ரணில், “திசைக்காட்டிக்கு பல இடங்களில் பெரும்பான்மை கிடைக்காது.
அந்தப் பெரும்பான்மையைச் சேகரித்து அதிகாரத்தை பெறுவதற்கு நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, மற்ற குழுக்களும் ஒன்று சேர வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பற்றி எனக்குத் தெரியாது.
ஆனால் பல குழுக்கள் ஒன்று சேரும்போது, அவர்களும் இதை ஒப்புக்கொள்வார்கள். அப்படி அவர்கள் ஒன்று சேரும்போது, அதிக உறுப்பினர்களைக் கொண்ட குழுவிலிருந்து உள்ளூராட்சி நிறுவனங்களின் தவிசாளர்கள் நியமிக்கப்படுவாரக்ள்.
சக்திவாய்ந்த அரசாங்கம்
நாம் இப்போது செய்ய வேண்டியது பாரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவைப் பெறுவதுதான். நாம் மற்றவர்களுடன் மோதாமல் அதைச் செய்ய வேண்டும்.
சீனாவிற்குப் பிறகு சர்வதேச அளவில் மிகவும் சக்திவாய்ந்த அரசாங்கம் எங்களிடம் உள்ளது.ஏனென்றால் நாங்கள் ஒரு கடிதம் அனுப்பியவுடன், ஜனாதிபதி ட்ரம்ப் தொண்ணூறு நாட்களுக்கு வரிகளை ஒத்திவைப்பதாகக் கூறினார்," என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
