லண்டனில் இரவுவேளை இடம்பெற்ற சம்பவத்தால் பெரும் பதற்றம்!
லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில், தாக்குதலுக்குள்ளான நபர் ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தெற்கு லண்டனில் நேற்றிரவு நடந்த குழு மோதலின் போது நான்கு பேர் கத்திக் குத்துத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், கொலை முயற்சி சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குழுக்களுக்கிடையே மோதல்

பிரிக்ஸ்டனில் உள்ள ஜோசபின் அவென்யூ பகுதியில் மாலை 6.20 மணியளவில் குழுக்களுக்கிடையில், கடும் மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் 30 வயது நபர் ஒருவரை கத்திக்குத்து காயங்களுடன் காவல்துறையினர் மீட்டதோடு, உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்ட மற்றுமொருவரை, காவல்துறையினர் கொலை முயற்சி சந்தேக நபராக கைது செய்துள்ளனர்.
7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

மேலும், சம்பவம் நடந்த பகுதியில் இருந்து மெர்சிடிஸ் ஒன்று வெளியேற முயற்சித்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஒருவரை மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதுடன், 7 பேர் கைதாகியுள்ளனர்.
லண்டனில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், கடந்த வாரம் லண்டன் மேயர் சாதிக் கான் தெரிவிக்கையில்,
பாடசாலை விடுமுறை மற்றும் வெப்ப அலையே காரணம்

பாடசாலை விடுமுறை மற்றும் வெப்ப அலை காரணமாகவே லண்டனில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி படுகொலை சம்பவங்கள் தொடர்பிலும் தகவல் வெளியாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், காவல்துறை உரிய நடவடிக்கை முன்னெடுத்து வருவதாகவும், வன்முறை சம்பவங்களை ஒடுக்க தேவையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.