ரணிலின் கைது அதிர்ச்சியால் உயிரிழந்தாரா வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக வேந்தர்?
ரணில் விக்ரமசிங்கவின் கைது காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியினால் லோர்ட் போல் ஒஃப் மேரிலேபோன் திடீரென உயிரிழந்நிருக்கலாம் என ஜனாதிபதி சட்டத்தரணி திலக் மாரப்பன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
1999 முதல் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தின் வேந்தராகப் பணியாற்றிய லோர்ட் போல் என் அழைக்கப்படும் ஸ்வராஜ் போலின் அழைப்பின் பேரில் ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவுக்கு பயணம் செய்ததாக திலக் மாரப்பன கூறினார்.
இது ஒரு அபத்தமான வழக்கு
இது ஒரு அபத்தமான வழக்கு. ஒரு ஜனாதிபதி பயணம் செய்ய உரிமை உண்டு, மேலும் அனைத்து செலவுகளும் கணக்காய்வாளர் நாயகத்தினால் முறையாகக் கணக்கிடப்படுகின்றன.
ஏதேனும் பிரச்சினை இருந்தால், கைதுக்கு மாறாக, மேலதிக கட்டணம் அறவிட்டிருக்க முடியும்.
எனினும் இந்த நடவடிக்கை இலங்கைக்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவின் விளக்கமறியல் சர்வதேச அளவில் விளைவுகளை ஏற்படுத்தியது என்று அவர் வாதிட்டார்.
லோர்ட் போல் முன்னாள் ஜனாதிபதியை பிரித்தானியாவில் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள அழைத்திருந்தார் என்பதைக் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகளின் தடையை ஆதரித்த புகழ்பெற்ற நபர்
இவர் விடுதலைப் புலிகளின் தடை மற்றும் GSP+ சலுகைகள் போன்ற முக்கியமான விடயங்களில் இலங்கையை ஆதரித்த புகழ்பெற்ற நபர்.
இந்த சம்பவம் அத்தகைய நபர்களை சங்கடப்படுத்தியுள்ளது. துரதிஷ்டவசமாக, இந்த சர்ச்சை எழுந்த உடனேயே லோர்ட் போல் காலமானார்.
ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதாகக் கேள்விப்பட்ட அதிர்ச்சி அவரது மரணத்திற்குக் காரணமா என்பது எங்களுக்குத் தெரியாது என திலக் மாரப்பன கூறினார்.
இதனிடையே, வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகம், ஒரு அதிகாரபூர்வ அறிக்கையில், அதன் வேந்தரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

