துவாரகாவிற்கு நடந்தது என்ன! அடேல் அன்ரியுடன் கதைக்காதது ஏன் - புதிய சர்ச்சை
சர்வதேச ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்த கருத்தொன்று தற்போது எல்லோராலும் பேசப்பட்டு வருகின்றது.
அதாவது விடுதலைப் புலிகளின் தலைவரின் துணைவியாரின் சகோதரி தன்னுடைய சகோதரி மதிவதனி மற்றும் துவாரகா(பெறாமகள்) போன்றவர்களை சந்தித்தேன் என்பதே ஆகும்.
இது பல்வேறு தரப்புக்களிலும் பாரியளவிலான சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில், பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திபாகரன் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேற்படி விடயம் தொடர்பில், பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.
விடுதலை போராட்ட தலைவனின் அணுகுமுறை இதுவல்ல

“தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என தமிமீழ மக்களும், இலங்கை அரசும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இவ்வாறான செய்திகள் வெளிவருவது ஓர் தவறான எண்ணப்போக்கை விதைக்கும் முயற்சியாகவே உள்ளது.
மேலும், விடுதலைக்காக போராடிய ஒரு தலைவன் அதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லுவதற்கான வழிமுறை இதுவல்ல.
அதாவது, தன்னுடைய உறவினர்களின் வாயிலாக தன்னை உறுதிப்படுத்துவதற்கு ஒரு புரட்சியாளனுக்கு அவசியம் இல்லை. வரலாற்றிலும் இவ்வாறான விடயங்களை நாம் காண முடியாது.
ஆகவே, இவ்வாறான செய்திகள் வெளிவருகின்ற முறைமைகள் தவறானதாகவே நோக்கப்படுகின்றது.
இன்று இருக்கின்ற தாயக நிலைமை என்பது தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்கின்ற, அவர்களை மேலும் அச்சுறுத்துகின்ற போக்கிலேயே உள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் தலைவர் இருக்கிறார். அவருடைய குடும்பத்தினர் உயிருடன் இருக்கின்றனர். அவரது மகள் இந்தப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல விரும்புகிறார் என சொல்லும்போது, இலங்கை அரசு எடுக்க கூடிய அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்றால் தமிழ் மக்களை இன்னும் அதிகமாக இராணுவ அழுத்ததிற்கு உள்ளாக்குவதாக தான் இருக்கும்.
அத்துடன், அவரது குடும்பத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என கடைசி யுத்தத்தின் தளபதி சொல்லக்கூடிய துர்ப்பாக்கிய நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, விடுதலைப் புலிகளின் தலைவரின் துணைவியாரின் சகோதரி மன அழுத்ததிற்கு உட்பட்ட காரணத்தினாலேயே அவர் இவ்வாறான செய்திகளை சொல்லுகிறார்” என்றார்.
இவ்விடயம் குறித்த மேலதிக தகவல்களை பின்வரும் காணொளியின் ஊடாக காணலாம்.