ரணில் ஆட்சிக்கு வருவதை விடுதலைப்புலிகளின் தலைவர் விரும்பவில்லை! அன்ரன் பாலசிங்கத்தின் எதிர்பார்ப்பு
இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்கு வருவதை விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் விரும்பவில்லை என ஆடுகளம் ஜெயபாலன் - வி. ஐ. எஸ். ஜெயபாலன் கூறுகிறாார்.
எமது ஊடகத்தின் பிரத்தியேக நேர்காணலில் அவர் இவ்வாறு கூறியிருந்தார்.
2005 காலப்பகுதியில் தான் தூதுவராக பணியாற்றிய காலத்தில் இந்த விடயம் Off the record இல் கூறப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், “மக்கள் ஆதரவு பெற்ற, இராணுவ பலமுள்ள அரச தலைவரை அவரது பதவிக் காலம் முடியும் வரை இரத்தம் சிந்தாமல் மாற்ற முடியாது.
இந்த விடயம் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தெரியும். சஜித் பிரேமதாசவிற்கு அரசியல் அனுபவம் இல்லை. அவர் பதவிகள் தன்னை தேடி வரும் என்று எதிர்பார்த்திருந்தார்.
ராஜபக்சர்களுக்கு இந்த நெருக்கடியான சூழலில் தேவையாக இருந்தது, தங்களுக்கு அரசியல் ரீதியாக விரோதமற்ற, குடும்பத்துடன் நெருக்கமான, வெளிநாடுகளுடன் நல்ல தொடர்புகளைக் கொண்ட ஒருவரையே” என்றார்.