மொட்டுவில் வெடித்தது பிளவு - சஜித் பக்கம் பாய தயாராகும் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் சுமார் இருபத்தைந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது கூட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பிரதிநிதிகளுடன் இந்தக்குழு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழு
பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி தற்போது நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்படும் நாடாளுமன்ற குழுக்களுடன் இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவும் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் மேலும் சில குழுக்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணையவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
