மியன்மாரில் இன்று அதிகாலை மீண்டும் நிலநடுக்கம்
மியன்மாரில் (Myanmar) இன்று (13) அதிகாலை மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
நிலத்திலிருந்து 35 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வால் சொத்துக்களுக்கோ உயிருக்கோ சேதம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
468 நில அதிர்வுகள்
நிலநடுக்கத்தின் மையப்பகுதி மே ஹாங் சன் மாகாணத்திலிருந்து வடமேற்கே சுமார் 271 கி.மீ தொலைவில் இருந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தின் (Thailand) சியாங் மாய் மற்றும் சியாங் ராய் ஆகிய இடங்களில் வசிப்பவர்களால் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை மார்ச் மாதம் 28 ஆம் திகதி ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்திலிருந்து நேற்று (12) வரை மியன்மார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 468 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
