2500 ரூபாயினால் அதிகரிக்கும் மகாபொல கொடுப்பனவு : ஜனாதிபதி அறிவிப்பு
பல்கலைக்கழக மாணவர்களுக்கான மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அறிவித்துள்ளார்.
இன்று (07) நாடாளுமன்றத்தில் நடைபெறும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையின் போதே ஜனாதிபதி இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மகாபொல உள்ளிட்ட கொடுப்பனவுகளுக்காக 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் உயர் கல்விக்காக மகாபொல கொடுப்பனவு 10000 ரூபாயுடன் மேலதிகமாக 5000 ரூபாய் வழங்கப்படும்.
2026 ஆம் ஆண்டு முதல் மகாபொல 10,000 ரூபாய் வரை அதிகரிக்கப்படும், தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கான கொடுப்பனவு 2,500 ரூபாயினால் அதிகரிக்கப்படும்.
விசேட தேவையுடைய பிள்ளைகள் உயர் கல்வியை பெறுவதற்காக 5,000 ரூபாய் மாதாந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடளாவிய ரீதியில் உள்ள தொழிற் பயிற்சி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு 8,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்.” என தெரிவித்தார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |