இலங்கை காவல்துறைக்கு அவமானம் - மஹேல ஜெயவர்தன கடும் கண்டனம்
ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தை வன்மையாக கண்டித்துள்ளார் சிறிலங்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் மகேல ஜெயவர்தன.
இது தொடர்பாக அவர் ருவிட்டர் பதிவில் தெரிவிக்கையில்,
மக்கள் வன்முறையில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், அவர்களைக் கைது செய்யலாம், ஆனால் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த எந்த காரணமும் இல்லை? இதுதான் ஜனநாயகமா? இது நாட்டின் சட்டமா? இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்... உங்களுக்கு இலங்கை காவல்துறை அவமானம்
If the people were violent and damaging public property they can be arrested but no excuse to shoot at them? Is this democracy? Is this law of the land? Who ever responsible for this must be bought to justice… SL police shame on you…?? https://t.co/ufh4ETowsk
— Mahela Jayawardena (@MahelaJay) April 19, 2022
