மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ள மகிந்த! காரணம் கூறும் மொட்டு தரப்பு
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்தத்தில் இருந்து நாட்டை விடுவித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்றும் கூட தனது உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலைக் கொண்ட நபராக மாறிவிட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவருக்கு மிகவும் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டது என்றும், ஆனால் அந்தப் பாதுகாப்பை பறித்த ஜே.வி.பி, தற்போது மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
அதிக பாதுகாப்பு
“மகிந்த பயன்படுத்தியதை விட ஜனாதிபதி அதிக பாதுகாப்பைப் பயன்படுத்துகிறார் என்பது இப்போது தெளிவாகத் தெரிகிறது.
அது மட்டுமல்லாமல், அமைச்சர் லால்காந்த பாதுகாப்பு போதாது என்றும் கூடுதல் பாதுகாப்பு தேவை என்றும் கூறியுள்ளார்.
அரசாங்கம் மீண்டும் ஒருமுறை அதிவேக நெடுஞ்சாலை கட்டுமானத்தை சீனாவிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பதைக் கண்டோம்.
அந்த நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தவர்கள், சீனாவுடன் மீண்டும் வியாபாரம் செய்ய முடிவு செய்தது விதியின் முரண்பாடாகும்.
மகிந்த இந்த நாட்டை அபிவிருத்தி செய்யும்போது, அவர் சீனாவுடன் ஊழலில் ஈடுபடுவதாக கூறினார்கள். வாக்காளர்களை மகிழ்விக்கவும் தனக்காக வாக்குகளைப் பெறவும் மட்டுமே இவ்வாறான அறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆனால் அதன் பின்னால் எந்த உண்மையும் இல்லை” என கூறியுள்ளார்.
