மகிந்த ஒருபோதும் பதவி விலக மாட்டார்!! - சாகர காரியவசம் அறிவிப்பு
பிரதமர் மகிந்த ராஜபக்ச எக்காரணத்தை கொண்டும் பதவி விலகமாட்டார், அதற்கான அவசியமும் கிடையாது என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் நீக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில குறிப்பிட்டுள்ள விடயம் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பெரும்பான்மை பலம் எம்மிடமே உள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்கொள்ள தயார்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என அவசியமற்ற தர்க்கத்தை சுயாதீன குழுவினர் முன்வைத்து வருகின்றனர்.
குறுகிய அரசியல் நோக்கத்திற்காக மக்களாணைக்கு புறம்பாக செயற்பட முடியாது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு நாடாளுமன்றில் 113 பெரும்பான்மையை காட்டிலும் பெரும்பான்மை பலம் நிலையாக உள்ளது.
பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டிய தேவையும் கிடையாது,அதற்கான அவசியமும் கிடையாது.