மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரிக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு
புதிய இணைப்பு
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ரூ. 28 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை அவர் எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளியிடத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சி, லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழுவில் முன்னிலையாகிய போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அறிவிக்கப்படாத சொத்துக்களை கையகப்படுத்தி வைத்திருப்பது தொடர்பாக வாக்குமூலம் அளிக்க கடந்த ஆண்டு டிசம்பரில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் அவர் அழைக்கப்பட்டிருந்தாாக கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, மேஜர் நெவில் வன்னியாராச்சி லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
