உயிர்த்தஞாயிறு தாக்குதலில் நேரடியாக பங்கேற்ற பிள்ளையான் : அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பொது பாதுகாப்பு அமைச்சர்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் நேரடியாக ஈடுபட்ட தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்யதாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
தாக்குதலை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்த பிள்ளையான்
அத்துடன் பிள்ளையான் ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தமை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தாக்குதல் குறித்து முறையான விசாரணை
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து முறையான விசாரணை இன்னும் நடைபெற்று வருவதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.
அத்துடன், விசாரணைகளில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தாக்குதல் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் குறைபாடுகள் மற்றும் அலட்சியம் குறித்து தற்போது முறையான விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
