பாதுகாப்பு நீக்கம் : நீதிமன்றை நாடிய மகிந்தவிற்கு கிடைத்த முதல் வெற்றி

Mahinda Rajapaksa Supreme Court of Sri Lanka Ministry Of Public Security Harini Amarasuriya
By Sumithiran Feb 07, 2025 12:07 AM GMT
Report

பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்து உள்ளாகி வரும் தம்மிடமிருந்து நீக்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை திருப்பி அனுப்புமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிடக் கோரி,முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், மார்ச் 19 ஆம் திகதி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை அன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மூன்று தசாப்தங்களாக நாட்டைப் பாதித்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் பங்காற்றிய தனது தலைமைத்துவம் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்து ஆளாகியுள்ளநிலையில் தனது பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் பாதுகாப்புப் படையை செப்டம்பர் 30 முதல் 60 அதிகாரிகளாகக் குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவு தனது உயிருக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகக் தெரிவித்துள்ளார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரீத்தி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டவர்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தாக்கல் செய்த இந்த அடிப்படை உரிமைகள் மனுவில் பிரதமர் ஹரிணி அமரசூரிய(harini amarasuriya), வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath), அமைச்சரவை, பாதுகாப்பு செயலாளர், காவல்துறை மா அதிபர் மற்றும் பலர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு நீக்கம் : நீதிமன்றை நாடிய மகிந்தவிற்கு கிடைத்த முதல் வெற்றி | Mahinda S Petition Against Removal Of Security

சட்டத்தரணி அனுராத செனரத் மூலம் இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ள மகிந்த ராஜபக்ச, நாட்டில் மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு தான் தலைமை தாங்கியதாகக் கூறியுள்ளார்.

இஸ்ரேலுக்கு தொடர்ந்து படையெடுக்கும் இலங்கையர்கள்

இஸ்ரேலுக்கு தொடர்ந்து படையெடுக்கும் இலங்கையர்கள்

சரியான மதிப்பீடு இன்றி நீக்கப்பட்ட பாதுகாவலர்கள்

போரை வழிநடத்தியதன் காரணமாக பயங்கரவாத அச்சுறுத்தல்களை தொடர்ந்து எதிர்கொண்டதால், தனது பாதுகாப்பிற்காக மூன்று இராணுவத் தளபதிகள், நான்கு யூனிட் கொமாண்டர்கள் மற்றும் 58 பிற வீரர்களை நியமித்ததாகவும், மேலதிகமாக, 56 காவல்துறை அதிகாரிகள் மற்றும் 29 காவல்துறை ஓட்டுநர்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, தனது பாதுகாப்புக்காக 60 அதிகாரிகளை மட்டுமே விட்டுவிட்டு, மீதமுள்ள நூற்றுக்கணக்கான பாதுகாப்புக் காவலர்களை சரியான மதிப்பீடு இல்லாமல் நீக்கியதாகவும் கூறியுள்ளார்.

பாதுகாப்பு நீக்கம் : நீதிமன்றை நாடிய மகிந்தவிற்கு கிடைத்த முதல் வெற்றி | Mahinda S Petition Against Removal Of Security

இந்த நேரத்தில் தனது பாதுகாப்பிற்காக ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினர் யாரும் நிறுத்தப்படவில்லை என்றும், தனது பாதுகாப்பிற்காக காவல்துறை அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும், தன்னிச்சையாக தனது பாதுகாப்பை நீக்கியதால் தனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய மகிந்த ராஜபக்ச, தனது பாதுகாப்பை நீக்கியதன் மூலம், தனது அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அரகலய போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு அநுர அரசில் முக்கிய பதவி

அரகலய போராட்டத்தில் ஈடுபட்டவருக்கு அநுர அரசில் முக்கிய பதவி

மீளவும் பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும்

தான் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து மதிப்பீடு செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு நீதிமன்றத்தைக் கோரும் மகிந்த ராஜபக்ச, தம்மிடமிருந்து நீக்கப்பட்ட முழு பாதுகாப்புப் படையையும் மீள வழங்குவதற்கு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

பாதுகாப்பு நீக்கம் : நீதிமன்றை நாடிய மகிந்தவிற்கு கிடைத்த முதல் வெற்றி | Mahinda S Petition Against Removal Of Security

மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வாருனிகா ஹெட்டிகே தனது வழக்கை முன்வைத்து, மனு தொடர்பாக பிரதிவாதிகளிடம் கலந்தாலோசித்து ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க கால அவகாசம் வழங்குமாறு கோரினார்.

மனுதாரர் மகிந்த ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி, தனது வாடிக்கையாளரின் பாதுகாப்பைக் குறைப்பதா அல்லது அதிகரிப்பதா என்பது குறித்து முறையான பாதுகாப்பு மதிப்பீட்டிற்குப் பிறகுதான் முடிவு எடுக்கப்பட வேண்டும் என்றும், ஆனால் பிரதிவாதிகள் எந்தவொரு பாதுகாப்பு மதிப்பீட்டும் இல்லாமல் தங்கள் வாடிக்கையாளரின் பாதுகாப்பைக் குறைத்துள்ளனர் என்றும் கூறினார்.

லசந்த விக்ரமதுங்க கொலை விவகாரம்: நேரடி களத்தில் ஜனாதிபதி அநுர

லசந்த விக்ரமதுங்க கொலை விவகாரம்: நேரடி களத்தில் ஜனாதிபதி அநுர

முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த பின்னர், மனுவின் உண்மைகளை உறுதிப்படுத்த மார்ச் 19 ஆம் திகதி விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், எதிர்மனுதாரர்கள் சார்பாக ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் கோரியதை ஏற்றுக்கொண்டு, தேவைப்பட்டால் எதிர்மனுக்களை முன்வைக்கலாம் என்று மனுதாரருக்குத் தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024