மோடிக்கு தனிப்பட்ட செய்தியை அனுப்பிய மகிந்த
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு(Narendra Modi) சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தனிப்பட்ட செய்தியை அனுப்பியுள்ளதாக இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா(Harsh Vardhan Shringla) தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ருவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள குஷி நகரில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்ட சர்வதேச விமான நிலையத்தில் முதலாவதாக இலங்கையிலிருந்து சென்ற விமானம் தரையிறங்கியது.
இந்த விமானத்தில் சென்ற அமைச்சர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa), பிரதமர் மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.இதன்போது சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட பகவத் கீதையை அவர் பிரதமர் மோடியிடம் கையளித்தார்.
அத்துடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச அனுப்பிய தனிப்பட்ட செய்தியையும் கையளித்தார் என அவர் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
When Minister Namal Rajapaksa met our PM, he presented to him a copy of Bhagavad Gita in Sinhala language, in which his father Sri Lankan PM Mahinda Rajapaksa has written a personal message to our PM: Foreign Secretary Harsh Vardhan Shringla, in Kushinagar (UP) pic.twitter.com/1HPa8KDQQB
— ANI (@ANI) October 20, 2021