மகிந்தவின் மகன் ரோஹித ராஜபக்ச CCIBயில் முன்னிலை!
Mahinda Rajapaksa
Sri Lanka Police Investigation
Rohitha Rajapaksa
By Sathangani
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான ரோஹித ராஜபக்ச சற்றுமுன்னர் காவல்துறை மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்திற்கு (CCIB) சமூகமளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக அவர் அந்த பணியகத்திற்கு சமூகமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிரிஹானா பகுதியில் அமைந்துள்ள இரண்டு நிறுவனங்களில் 19 மில்லியன் ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகஅவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
வாக்குமூலம் வழங்க அழைப்பாணை

இந்த நிலையில் அந்த இரண்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக, வாக்குமூலம் அளிப்பதற்காக ரோஹித ராஜபக்சவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
4 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்