சிறிலங்கா சபாநாயருக்கும் கொரோனா தொற்று!
Corona
Parliament
Mahinda Yapa Abeywardena
SriLanka
By Chanakyan
சிறிலங்கா சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு (Mahinda Yapa Abeywardena) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது சபாநாயகருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக நாடாளுமன்ற தகவல்களை மேற்கோள்காட்டி குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற அரச தலைவரின் கொள்கைப் பிரகடன உரை மற்றும் அதன் மீதான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், இது வரையில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் சபாநாயருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 9 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்