மைத்திரி -மகிந்தானந்த இடையே வெடித்தது மோதல்
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) ஓய்வு பெறுவதற்காக பெற்றுக்கொண்ட மூன்று வீடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே(Mahindananda Aluthgamage) அரச சேவைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில் குறித்த மூன்று வீடுகள் தொடர்பிலான விரிவான தகவல்களை வழங்க உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை இன்றையதினம் நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, மைத்திரிபால சிறிசேன காலத்தை விட தற்போதைய அரச தலைவரின் பாதீட்டில் ஒரு பில்லியன் ரூபா மிச்சப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
எனவே தமது அரச தலைவரைப் பற்றி பேச தமக்கு உரிமையுள்ளதாக அவர் தெரிவித்தார் அத்துடன் முன்னாள் அமைச்சா்கள் சரத் அமுனுகம(Sarath Amunugama), கெஹெலிய ரம்புக்வெல மற்றும் முன்னாள் அரசதலைவர் டி பி விஜேதுங்க(DP Wijetunga) ஆகியோர் பயன்படுத்திய மூன்று வீடுகளை இணைத்து பொிய வீடு ஒன்றிலேயே மைத்திரிபால சிறிசேன தற்போது வசிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிலையிலேயே அவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஓய்வு பெறுவதற்காக பெற்றுக்கொண்ட மூன்று வீடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு கடிதம் அனுப்பியுள்ளார். கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.