மகிந்தவின் மகன் நான் அச்சுறுத்தலுக்கு அடிபணியேன் : அநுரவுக்கு நாமல் பதிலடி
“ மகிந்த ராஜபக்சவின்(mahinda rajapaksa) மகன் நான்.அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து ஒருபோதும் அரசியல் முடிவுகளை எடுக்கப்போவதில்லை.”
இவ்வாறு தெரிவித்தார் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர்,நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa).
ஜே.வி.பியின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி அநுர குமார ஆற்றிய உரை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்ண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மகிந்தவுடன் இணைந்து செயற்பட்ட அநுர
“ நாம் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து அரசியல் முடிவுகளை எடுக்கும் நபர்கள் கிடையாது. இது ஜனாதிபதிக்கும் நன்கு தெரியும். 2005 இல் அவர் எனது தந்தையுடன் செயற்பட்டார்.
அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய தயாரில்லை
அந்தவகையில் நான் மகிந்த ராஜபக்சவின் மகன், அச்சுறுத்தல்கள்மூலம் எம்மை முடிவுகளை எடுக்க வைக்க முடியாது. நாம் மக்கள் ஆணையை ஏற்போம். ஆனால் அரசியல் ரீதியில் விடுக்கப்படும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிய தயாரில்லை.
மக்கள் வழங்கியுள்ள ஆணையின் பிரகாரமே உள்ளுராட்சிசபைத் தேர்தல்களில் ஆட்சியமைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும். ஜனாதிபதி அழுத்தங்கள் விடுப்பதால் எமது நிலைப்பாடு மாறாது.”எனத் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
