தேரர்களின் தாய்லாந்து போதைப்பொருள் கடத்தல்! விசாரணையில் கண்டறியப்பட்ட முக்கிய சூத்திரதாரி

Bandaranaike International Airport Colombo Court of Appeal of Sri Lanka
By Dharu May 03, 2026 03:45 AM GMT
Report

தாய்லாந்திலிருந்து நாட்டிற்குள் குஷ் மற்றும் ஹாஷ் போதைப்பொருட்களைக் கொண்டுவந்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருபத்து மூன்று தேரர்களையும் மே 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகரா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இந்த உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.

தாய்லாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த குறித்த தரப்பினரின் பயணப் பைகளில் 112 கிலோகிராம் 'குஷ்' மற்றும் 'ஹாஷ்' போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல் 25 ஆம் திகதி நாட்டிற்கு வந்தடைந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து  கைது செய்யப்பட்டனர்.

தாய்லாந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்திய காலி தொழிலதிபர்!

தாய்லாந்து போதைப்பொருள் கடத்தலை வழிநடத்திய காலி தொழிலதிபர்!

போதைப்பொருட்கள் அடங்கிய பெட்டி

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​இந்த சட்டவிரோதச் செயலை அமிதானந்தா என்ற தேரர் திட்டமிட்டு அரங்கேற்றியது தெரியவந்துள்ளது.

தேரர்களின் தாய்லாந்து போதைப்பொருள் கடத்தல்! விசாரணையில் கண்டறியப்பட்ட முக்கிய சூத்திரதாரி | Main Mastermind Thailand Drug Trafficking Of Monks

பின்னர், கம்பஹா பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பதுங்கியிருந்தபோது, ​​அமிதானந்தா என்ற துறவியும் கைது செய்யப்பட்டார்.

இதன்படி  நீர்கொழும்பு மேலதிக நீதிபதி சுபானி அபேசேகரா முன்னிலையில் சட்ட நடவடிக்கைகள் அழைக்கப்பட்டபோது, ​​இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பல முக்கிய சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறி, காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஒரு மேலதிக விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.

நீதிமன்றுக்கு சமர்ப்பித்த அறிக்கையின் படி, 

“ இந்தத் தேரர்கள் அனைவரும் வணக்கத்திற்குரிய அங்குனுகோலா அமிதானந்த தேரரால் நடத்தப்படும் ஒரு வாட்ஸ்அப் குழுவின் மூலம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் தேரர்களுக்கு , தாய்லாந்தில் உள்ள தம்மா என்று அழைக்கப்படும் தம்மரக்கித்தா என்ற தேரர் தங்குமிடம் வழங்கியுள்ளார்.

பின்னர், அதே தம்மரக்கித்தா என்ற தேரர் , ஏப்ரல் 25 ஆம் திகதி நாட்டுக்கு திரும்புவதற்காக, போதைப்பொருட்கள் அடங்கிய ஒரு பெட்டியை இந்தத் தேரர்களிடம் கொடுத்துள்ளார்.

இந்த கைது பின்னணியில், எமது விசாரணையில் அம்பகஸ்முல்லாவைச் சேர்ந்த புண்யரத்னா என்ற மற்றொரு தேரர் அடையாளம் காணப்பட்டார்.

மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானம் அமெரிக்காவின் கைகளில்! ஈரான் வெளிப்படை

மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் தீர்மானம் அமெரிக்காவின் கைகளில்! ஈரான் வெளிப்படை

கடத்தலின் முக்கிய சூத்திரதாரி

புண்யா என்ற அந்தத் தேரர்தான் இந்த போதைப்பொருள் கடத்தலின் முக்கிய சூத்திரதாரி. நாங்கள் தற்போது அந்தத் துறவியைக் கண்டுபிடிக்க விசாரித்து வருகிறோம்.

தேரர்களின் தாய்லாந்து போதைப்பொருள் கடத்தல்! விசாரணையில் கண்டறியப்பட்ட முக்கிய சூத்திரதாரி | Main Mastermind Thailand Drug Trafficking Of Monks

ஏனெனில், சந்திரகுமார ஜெயலத் என்ற என்பவருடன் இணைந்து இந்த போதைப்பொருட்களை விநியோகித்தவர் அந்தத் துறவிதான்.

சந்திரகுமாரா என்ற நபர் 6 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

அதன் பின்னர் காவலில் வைப்பதற்கான உத்தரவு பெறப்பட்டுள்ளது” என்றுள்ளது.

மேலும், மேலதிக விசாரணைகள் தொடர்பான தகவல்களை மீண்டும் வழங்கிய புலனாய்வு அதிகாரி,

“ இந்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுள்ளதாக அறியப்படும் முக்கிய சூத்திரதாரிகள், இதற்கு முன்னர் போதைப்பொருட்கள் அடங்கிய 12 சூட்கேஸ்களை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

நான் முன்னர் குறிப்பிட்ட வணக்கத்திற்குரிய புண்யரத்ன தேரரின் வழிகாட்டுதலின் கீழ், போதைப்பொருள் அடங்கிய 12 சூட்கேஸ்கள் முந்தைய ஒரு சந்தர்ப்பத்தில் இந்த நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

2.5 மில்லியன் டொலர் மோசடி- அதிகாரியின் உயிரிழப்புக்கு அரசின் தவறான முடிவுகளே காரணம்: விமல் வீரவன்ச சாடல்

2.5 மில்லியன் டொலர் மோசடி- அதிகாரியின் உயிரிழப்புக்கு அரசின் தவறான முடிவுகளே காரணம்: விமல் வீரவன்ச சாடல்

தற்போதைய விசாரணை

மேலும், இந்த பயணத்திற்காக பிக்குகளை அழைத்துச் செல்லத் தேவையான விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்காக வணக்கத்திற்குரிய புண்யரத்ன சந்திரகுமாரருக்கு 5 மில்லியன் ரூபாய் வழங்கியுள்ளார்.

தேரர்களின் தாய்லாந்து போதைப்பொருள் கடத்தல்! விசாரணையில் கண்டறியப்பட்ட முக்கிய சூத்திரதாரி | Main Mastermind Thailand Drug Trafficking Of Monks

சந்திரகுமார 3.2 மில்லியன் ரூபாய்க்கு விமான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார். மீதமுள்ள பணத்தைக் கொண்டு, போதைப்பொருள் அடங்கிய சூட்கேஸ்களை இந்த நாட்டிற்குள் கொண்டு வந்த பிறகு அவற்றை சேமித்து வைப்பதற்காக ஒரு வீட்டையும் வாங்கியுள்ளார்.

மேலும், தற்போதைய விசாரணையின் போது, ​​இந்த தேரர்களைத் தொடர்புகொள்வதற்காக புண்யரத்ன தேரர் அங்குனுகோல அமிதானந்த தேரருக்கு 80,000 ரூபாய் வழங்கியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது” என்றார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024